×

கிருஷ்ணகிரி அருகே அதிகாலையில் சோகம்: மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே வீட்டில் மின்சாரம் தாக்கி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். ஊத்தங்கரை அருகே சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா(52). இன்று காலை இந்திரா துணி துவைத்து, அதை வீட்டின் முன் உள்ள கம்பியில் காய வைக்க முயன்ற போது கம்பியிலிருந்து மின்சாரம் பாய்ந்ததில் இந்திரா, மகாலட்சுமி, 2 வயது சிறுமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மூவரின் சடலங்களும் மீட்கப்பட்டது. மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிங்காரப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : Kṛṣṇakiri , Early morning tragedy near Krishnagiri: Three people, including a child, were electrocuted
× RELATED கிருஷ்ணகிரி வேப்பனஹள்ளி அருகே...